Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில்; புச்சாக்கேணி, கதிரவெளியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ப.தயாபரன் (வயது 37) என்ற குடும்பஸ்தர் நேற்று புதன்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பால்சேனை - திருமலை வீதியில் குறுக்கே நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது, தலையில் படுகாயமடைந்த இவர், வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago