2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 18 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்


மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாய்சேய் சிகிச்சை நிலையத்தின் கட்டட வேலைகளை தொடரவிடாமல் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாக கோரி செம்மண்ணோடை மக்கள் இன்று புதன்கிழமை(18) பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.


ஐரோப்பிய யூனியனின் 45 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் யுனிசெப் நிறுவனத்தின் நடைமுறையப்படுத்தலின் கீழ், மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின்  மேற்ப்பார்வையின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இக்கட்டடம் அமைக்கப்படும் இடத்துக்கு அருகில் செம்மண்ணோடை பிரதேசத்தின் பொது விளையாட்டு மைதானம் அமைந்துள்ளதாகவும் இக்கட்டடத்தை அமைப்பதால் மைதானத்தின் அளவு குறைந்துவிடும் என அப்பகுதி விளையாட்டு கழகம் ஒன்று தெரிவித்ததையடுத்து, விளையாட்டு மைதானம் புனரமைப்புச் செய்து தரப்படும் என பிரதேச செயலக அதிகாரிகளால் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான பொருட்களை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டமையால், மைதானத்தை சற்று தாமதமாக புனரமைப்பு செய்துதருவதாக கூறியதையடுத்து, பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகமொன்று தாய்சேய் சிகிச்சை நிலையத்தை அமைக்கும் செயற்பாடுக்கு தொடர்ந்து தடங்கள்களை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரின் பிரதிநிதியாக குறித்த இடத்துக்கு வருகைதந்த உதவி திட்டப்பணிப்பாளர், குறித்த தாய்சேய் நிலையம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்படுமெனவும் அத்துடன், மைதானமும் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.


இதன்போது, தாய்சேய் சிகிச்சை நிலையத்தை அமைப்பதுக்கு தடையேற்படுத்தியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும்; கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X