2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற  விபத்தில படுகாயமடைந்த இரண்டு இளைஞர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலையை சேர்ந்த மகேந்திரன் நர்மதன் (வயது 25) மற்றும் கோபிந்தன் தனபதி (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

உடனடியாக  செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி இரு இளைஞர்களும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது,  வீதியால் வந்த வாகனமொன்று மோதியே இந்த விபத்து சம்பவித்தது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X