Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 06 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலிறுத்தியுள்ளது.
மட்டக்களப்பு, வாவிக்கரையில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அலுவலகத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'தமிழ்த் தேசியத்தின் நலன் கருதி ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்க்கட்சிகளின் கூட்டமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கூட்டுத்தலைமைகள் கூடித் தீர்மானங்களை தீர்மானித்து அறிவிப்பதே சனநாயகமாகும். தமிழ்த் தேசியத்தின் நலனுக்கும் அதன் உரிமைகள் தொடர்பான போராட்டப்பாதைக்கும் அதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் பங்கம் விளைவிப்பதாகவே அமையும்.
கிழக்கு மாகாணசபையில் பலமான ஆட்சியாளராக மாறுவதற்கானதும் முதலமைச்சரை பெறுவதற்கானதும் அதிகாரமுள்ள அமைச்சை பெறுவதற்குமான வாய்ப்புகள் இருந்தும் அதைத் தவறவிட்டுள்ளோம். இந்தப் பொறுப்பை இந்தத் தவறை விட்டவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். இனிமேல் இந்த தவறை விட்டுவிடக்கூடாது.
இன்றைய சூழ்நிலையில் நாம் பலமாக இருக்கும்போது, முஸ்லிம் காங்கிரஸால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் எனும் ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் இருந்துவருகின்றது.
மாவட்ட ரீதியான பொதுவான வேலைகளை முன்னெடுப்பதற்கும் கிழக்கு மாகாணசபையில் கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தடுத்துநிறுத்தவும் திறமை அடிப்படையிலும் விகிதாசார முறையிலும் நியமனங்களை வழங்கவும் அதிகாரப்பங்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் விகிதாசார அடிப்படையில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவும் இன ஐக்கியத்தை உருவாக்குவதற்கும் எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.
மேலும், கூட்டமைப்பிலுள்ள ஒருகட்சி கூட்டு முடிவை எடுக்காமல் தனித்து செயற்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள தவறுகளை சுட்டிக்காட்டியமைக்காக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈழமக்கள் புரட்;சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மீது கடந்தவாரம் குறித்த ஒரு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுமத்தப்பட்ட கண்டனத் தீர்மானமானது இன்றைய சூழலில் எமக்கு மனவேதனை அளிக்கின்றது.
கிழக்கு மாகாண ஆட்சியமைப்பு தொடர்பாகவும் அமைச்சுப் பதவிகள் பகிர்தளிக்கப்பட்ட முறைமை தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்; அங்கம் வகிக்கும் ஒரு கட்சி சனநாயக வரன்முறைகளுக்கு முரணாக நடந்துகொண்டமை தொடர்பாக நாம் மிகுந்த மனவேதனை அடைகின்றோம்.
இந்நிலைமைகள் தமிழ்த் தேசியத்தின் நலனுக்கும் அதன் உரிமைகள் தொடர்பான போராட்டப்பாதைக்கும் அதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் பங்கம் விளைவிப்பதாகவே அமையும்.
எனவே, தமிழ்த் தேசியத்தின் நலன் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி மாற்றத்தின் பின் முன்னெடுத்துவரும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான இராஜதந்திர நடவடிக்கைகளையும் தமிழர்களின் உரிமைகள், அபிலாஷைகள், இயல்பு வாழ்க்கை, புனர்வாழ்வு நடவடிக்கைகள், அதிகாரப்பங்கீடு முதலான கருத்திட்டங்களுக்கும் உணர்வுபூர்வமாகவும் இதயசுத்தியோடும் மனஉறுதியோடும் நாம் எமது வேலைத்திட்டங்களை காலத்தின் தேவை அறிந்து கூட்டுத் தலைமைகளால் மட்டும் உருவாக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். இதுவே இன்று நம்முன்னுள்ள கடமையாகும்.
இந்தவகையில் தமிழ்த் தேசியத்தின் இலட்சியத்தை என்றுமே வெல்லப்பட முடியாத வரலாற்றுச் சூழ்நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. இதன் காரணமாக தமிழ்த் தேசியத்தை பிளவுபடுத்தி சின்னாபின்னாமாக்கித் தமிழ்த் தேசியத்தின் சனநாயக அரசியல் இருப்பையும் உரிமையையும் குழிதோண்டிப் புதைத்துவிடும் செயல் நிலைவாத நிலைப்பாட்டையே இந்நிலைமைகள் தோற்றுவிக்கும்.
தமிழ்த் தேசியத்தின் வலிமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல தமிழ்த் தேசியக் கட்களின் ஐக்கியம் தொடர்ந்து பேணப்பட, உட்கட்சி முரண்;பாடுகளையும் கருத்து மோதல்களையும் கூடுமானவரை தவிர்த்துக்கொள்ள, தமிழ் மக்கள் கட்சி ரீதியாக பிரிந்துநின்று தமிழ்ப்; பிரதிநிதித்துவங்களை கிழக்கு மண்ணில் இழக்காது இருக்க கூட்டுத்தலைமை பொதுவான வேலைத்திட்டத்தை வகுத்து மாவட்ட ரீதியாக வெளியிலுள்ள நல்ல சக்திகளை இனங்கண்டு அவர்களை உள்வாங்கி கிராம ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதோடு, தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பு உடனடியாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு தீர்மானித்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago