2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வாழச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வாழச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக, வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை வீட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் வாழச்சேனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே சிசிகலா ரதன் (31) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X