2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2015 மார்ச் 11 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் நான்கு குடும்பங்களுக்கு சுயதொழில் மேம்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை (10) நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு தலா 30,000 ரூபாய் படி சமூக சேவைகள் திணைக்களத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் ரீ.விவேகராஜன், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகஸ்;தர் நவலக்ஷ்மி தயாபரன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X