Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 12 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் மட்டக்களப்பு மாவட்டத்தில்; இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
மட்டக்கப்பு மாவட்ட புற்றுநோய் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் றோட்டரிக்கழகம், செலான் வங்கி ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கல்லடிப்பாலத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடைந்தது. இதன்போது, புற்றுநோய்த்; தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் இவர்கள் தாங்கிச் சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு புற்றுநோய் சங்கத்தின் தலைவர் டாக்டர் என்.சயணொளிபவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராஜா, லயன்ஸ்கழக தலைவர் ஏ.செல்வேந்திரன், றோட்டரிக்கழக தலைவர் ஏ.டொமினிக் ஜோர்ஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .