2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் ஆட்டோ சாரதி காயம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 17 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் ஐயனார் கோவிலுக்கு முன்பாக திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி  பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதிலிருந்து வாழைச்சேனை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி,  வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பமொன்றுடன் மோதியுள்ளது.

சாய்ந்தமருதைச் சேர்ந்த முகமட் இஸ்மயில் என்ற முச்சக்கரவண்டி சாரதியே   படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X