2025 மே 19, திங்கட்கிழமை

பாம்பு தீண்டி பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில்  பாம்பு தீண்டி குடும்பப் பெண்ணொருவர் திங்கட்கிழமை (16) இரவு  உயிரிழந்ததாக மாவடிவேம்பு வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரளக்குளம், வேரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான  வண்ணச்சாமி செல்வரெட்னம் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேற்படி கிராமத்தில் வைத்தியசாலை இல்லாமையால்,  வந்தாறுமூலை, மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு நீண்ட பயணத்தின் பின்னரே  இந்தப் பெண் கொண்டுவரப்பட்டார். இருப்பினும்,  இடைவழியில் இவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X