2025 மே 19, திங்கட்கிழமை

'பெண்களை முச்சக்கரவண்டி சாரதிகளாக அங்கீகரிப்போம்'

Princiya Dixci   / 2015 மார்ச் 17 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பில் முதன் முறையாக, 'எங்களால் முடியும், பெண்களால் முடியும்' எனும் தொனிப்பொருளில் பெண்களை முச்சக்கரவண்டி சாரதிகளாக அங்கீகரிப்போம் எனும் நடவடிக்கை, செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தால் டேவிட் பீரிஸ் மோட்டர்ஸ் நிறுவத்தின் மட்டக்களப்பு கிளை அனுசரணையுடன் மட்டக்களப்பு, கல்லடியில் இதன் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.  

முச்சக்கரவண்டி சாரதிகளாக பயிற்சியை முடித்த மட்டக்களப்பைச் சேர்ந்த இருபது பெண்கள், முச்சக்கரவண்டிகளை செலுத்திக்காட்டியதுடன் அவர்களின் அனுபவங்களையும் இதன் போது பகிர்ந்துகொண்டனர்.

அடுத்தகட்ட முச்சக்கரவண்டி பெண் சாரதிகளுக்கான பயிற்சியளிக்கும் நடவடிக்கையும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது. முச்சக்கரவண்டி சாரதியான எஸ்.றொமிளாயின் வழிகாட்டலில் இந்தப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X