Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 18 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் இரு பெரும் விழாக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (17) வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை மாணவிகளது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு 2014ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள் மற்றும்; பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் கொரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஐ.எம்.இப்றாஹிம், எம்.எஸ்.கே.றஹ்மான் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago