2025 மே 19, திங்கட்கிழமை

பாசிக்குடாவில் துப்பாக்கி மீட்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவில்  சுற்றுலா விடுதி அமைந்துள்ள காணியிலிருந்து  ரி -56 ரக  துப்பாக்கியொன்று கல்குடா பொலிஸாரினால் திங்கட்கிழமை (23)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விடுதிக்கு சுற்றுமதில் அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டியபோது, இந்த துப்பாக்கி தென்படுவதைக் கண்ட கட்டடத் தொழிலாளர்கள்   தமக்கு  தகவல் வழங்கினர். இதை அடுத்து,  குறித்த இடத்துக்கு சென்று இந்தத் துப்பாக்கியை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த துப்பாக்கி துருப்பிடித்துக் காணப்படுவதுடன்,   பயன்படுத்தமுடியாத நிலையிலுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X