2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் காயம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு — கல்முனை பிரதான வீதியில் தாழங்குடாச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியபோதே இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X