2025 மே 19, திங்கட்கிழமை

தீயணைப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி

Thipaan   / 2015 மார்ச் 24 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரியுதாஜித்

கல்முனை மாநகர சபையும் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு உத்தியோகத்தர்களுக்காக ஆரம்பித்துள்ள பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(24) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை மேயர் நிசாம் காரியப்பர், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் ரி.தனஞ்சயன், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இத் தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப்பிரிவு பொறுப்பாளர் விவேகானந்த பிரதீபன் தலைமையிலான குழுவினர் பயிற்சிகளை வழங்கினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X