2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்தியுள்ளனர்

Sudharshini   / 2015 ஏப்ரல் 21 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட, மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளையும் மிகவும் வினைத்திறனுடன் பயன்படுத்தி பல செயற்றிட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மாவட்ட திட்டமிடல் பிரிவுகளில் திறமையாகச் செயற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கான பாராட்டுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (20) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறானதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டுக்கு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,  பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உத்தியோகஸ்தர்கள் உட்பட அனைவரது பங்களிப்பும் முக்கியமானதாகும்.

இச்சந்தர்ப்பத்தில் இவர்களை பாராட்டி கௌரவிப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செய்ற்பாட்டுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்டத்தின் மாவட்ட செயலக திட்டமிடல் செயலகம், பிரதேச செயலகங்களிலுள்ள திட்டமிடல் பிரிவுகள் அடங்கலாக மொத்தமாக 527 பேர் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 50 பேர் நேற்றைய தினம் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு சிறப்பாகச் செயற்பட்டு செயற்றிட்டங்களைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அரசாங்க அதிபரால் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X