2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாவனைக்குதவாத இனிப்பு பண்டங்கள் மீட்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவாணைக்குதவாத ஒரு தொகை இனிப்பு பண்டங்களை காத்தான்குடியிலுள்ள சிறுவர்களுக்கான இனிப்பு பண்டங்கள் விற்பணை செய்யும் நிலையமொன்றிலிருந்து பொதுச் சுகாதார பரிசேகாதர்கள் இன்று புதன்கிழமை (22) கைப்பற்றியுள்ளனர்.

உணவு பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மனித பாவானைக்குதவாத இனிப்பு பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் மேற்பார்வையின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.றபீக்கின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், என்.கருணாகரன், ஏ.கே.திஸ்ஸவீரசிங்க, ரி.மிதுன்ராஜ், ஜே.ஜெயனிகாந் ஆகியோர்களினால் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவானைக்குதவாத இனிப்பு பண்டங்கள் கைப்பற்றப்பட்டதாக பரிசோகர்கள் தெரிவித்தனர்.

இனிப்பு பண்டங்கள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை, உரிய ஒழுங்கு விதிகளுக்கமைய லேபலிடப்படாமை போன்ற காரணங்களுக்காகவும்; இனிப்பு பண்டங்கள் கைப்பற்றப்பட்டபட்டதுடன், விற்பனை நிலைய உரிமையாளருக்கெதிராக நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.றபீக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X