Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் கிராம ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி திட்டத்தின், கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதி மக்களுக்கான உதவிபொருட்கள் வழங்கப்பட்டன.
இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வடமுனை, ஊற்றுச்சேனை ஆகிய பகுதிகளில் உள்ள வறியு மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
சாயிபாபாவின் நான்காவது சமாதி தினத்தை முன்னிட்டு தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் தலைவர் எஸ்.சாமித்தம்பி தலைமையிலான குழுவினர் நேரடியாகச்சென்று இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.
இதன்போது சுமார் 300 குடும்பங்களுக்கான படுக்கை விரிப்புகள் உட்பட உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக தாமரைக்கேணி ஸ்ரீ சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இப்பகுதி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
45 minute ago