2025 மே 17, சனிக்கிழமை

திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற  திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேரை  அவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் 70 கிலோகிராம் மிளகுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தாம் கைதுசெய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி காவத்தமுனை கிராமத்திலுள்ள ஆலையொன்றிலிருந்து  மிளகு திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதன்போது, அவர்களுக்கு கிடைத்த இரகசியத்தகவலை அடுத்து, ஓட்டமாவடியில் வர்த்தக நிலையமொன்றில் மிளகை விற்பனைக்காக வைத்திருந்த வேளையில் இந்த சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேக நபர்களுடன் தொடர்புடைய இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .