2025 மே 19, திங்கட்கிழமை

ஆதனவரி நிலுவைக்கு சட்ட நடவடிக்கை

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷாரா

“ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட எல்லைக்குள் மிகக் கூடுதலான ஆதனவரி நிலுவைகளைச் செலுத்தாதவர்கள், தங்களது நிலுவைகளை மிக விரைவாக செலுத்தி முடிக்கவேண்டும். செலுத்த தவறும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, நகர நபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார். 

“நகர சபை ஊழியர்களால் பல தடவைகள் அறிவித்தல்கள் வழங்கப்பட்டும், அவர்கள் இதுவரை தங்களின் ஆதனவரியைச் செலுத்தாமல் இருந்துள்ளமையால், நிலுவைகள் மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார். 

“எனவே, காரியாலயத்துக்கு சமூகம் தந்து, வரிகளைச் செலுத்தி, அவற்றுக்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும், இதற்காக வாரத்தின் 7 நாட்களும் அலுவலகம் திறந்து இருக்கும் என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X