கனகராசா சரவணன் / 2017 நவம்பர் 16 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி கனரக வாகனம், டிரக்டர் ஆகியவற்றில் ஆற்ற மண்ணை எடுத்துச் சென்ற இருவர், இன்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து, கனரக வானம், டிரக்டர் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆற்றுமண்ணை, குறித்த வாகனங்களில் எடுத்துச் சென்றபோது, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago