Princiya Dixci / 2021 ஜூன் 10 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வுவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியுடன் இருவரை, நேற்று (09) மாலை கைது செய்துள்ளதுடன், இரு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய பிரதேசங்களில் உள்ள இரு வீடுகளை, பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
இதன்போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்ததுடன், இரு துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025