2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டமைக்கு விஷேட வழிபாடு

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்; ஆர். சம்பந்தனுக்காகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சிக்காகவும் வாழைச்சேனை பொது மக்களால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூஜை நடாத்தப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் நாட்டு மக்களுக்காகவும் இவ் விஷேட பூஜை இடம் பெற்றதுடன் இன்றைய நினைவாக ஆலய வலாகத்தில் தென்னங்கன்று நடப்பட்டதுடன் பொது மக்கள் பட்டாசு கொழுத்தியும் தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினர்.

வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவாச்சாரியார் கோபாலப்பிள்ளை கபிலேஸ்வர குருக்கள் பூஜையினை நடாத்தி வைத்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X