2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஐவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

இடம் மாறி மணல் அகழ்வு மேற்கொண்ட ஒருவருக்கு 5,000 ரூபாய் அபராதத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா விதித்துள்ளார்.

இந்த சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய 05 பேருக்கு தலா 50,000 ரூபாய் படி அபராதத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா விதித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் 06 பேரும் நேற்று திங்கட்கிழமை வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X