Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தனது ஓய்வுக்காலம் முடிவதற்கு சற்று முன்னதாகவே தான் ஓய்வு பெற்றுச் செல்வதற்குத் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மாவட்டச் செயலகக் காரியாலயத்தில் நேற்று (25) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ஒரு பட்டதாரி ஆசிரியராக அரச சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட நான் படிப்படியாக பதவி உயர்வுகளைப் பெற்று மாவட்டத்தின் அரசாங்க அதிபராக இருந்து தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால் எனது ஓய்வுக்காலம் முடிவதற்கு முன்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
“மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்கும் அரசின் பிரதிநிதிதான் அரசாங்க அதிபராவார். காலத்துக்குக் காலம் மக்களால் உருவாக்கப்படுகின்ற அரசின் கொள்கைகளை, சரியாகவும், நேர்த்தியாகவும் செயற்படுத்துவதே அவருக்கான பணியாகும்.
“இதற்கான நியமனத்தை மாகாணசபைகள் உளூராட்சி அலுவல்கள், அமைச்சு அமைச்சரவையின் அங்கிகாரத்துடன், இலங்கை நிர்வாக சேவையின் அதி உயர் வகுப்பான அதிவிசேட தரத்தைச் சார்ந்த அனுபவம், நேர்மை, திறமை, விவேகம் என்பவற்றின் அடிப்படையில், இதற்கான அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவர்.
“அண்மைய செய்திகள், கறைபடிந்த கைகளும், கடத்தல் பேர்வழிகளும், கலகக்காரர்களும், கூட்டாகவோ, தனித்தோ, இப்பதவிக்கான உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்கின்றார்களோ என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன.
“அத்துடன், அரசாங்கத்துடன் பேரம்பேசுவதாகவும், தமது பதவிகளை இராஜினாமா செய்வதாகவும், மிரட்டுவதாகவும் வெளியாகும் தவவல்களுக்காக வேதனையடைகின்றேன்.
“இலங்கை நிர்வாக சேவையில் எவ்விதக் குற்றங்களும் இளைக்காமல், எதுவித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல், சேவையிலுள்ள என்னை எதுவித முன்னறிவித்தலுமின்றி, இடமாற்றம் வழங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“நான் ஓய்வு பெறுவதற்கு இருந்து வெறுமனே 10 மாதங்களும் 18 நாள்களும் உள்ள எனக்கு, திடீர் இடமாற்றம் என்றால் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக நான் முன்னராகவே பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றேன்.
“எனது கட்டாய ஒய்வு தினமான 21.12.2020 முன்னதாக, சுய விருப்பு ஓய்வுக்காக அமைச்சரவைக்கு விண்ணப்பித்துள்ளேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago