2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் ஜீப் வண்டி

Freelancer   / 2023 நவம்பர் 03 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வேகமாக சென்ற கல்குடா பொலிஸ் நிலைய ஜீப் வண்டி ஒன்று இன்று (3) விபத்துக்குள்ளாகியுள்ளது.  

வாழைச்சேனை துறைமுகத்துக்கு முன்னாலுள்ள வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இந்த ஜீப் மோதியுள்ளது.

இவ் விபத்தில் மதில், ஜீப் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இவ் விபத்தில் ஜீப் வண்டியை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X