2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கல்லடியில் பிடிபட்ட பாம்புகள் விலாங்கு மீனினமே

Editorial   / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்லடி கடற்பரப்பிலிருந்து, மீனவர்களின் வலைகளில் சிக்குண்ட பாம்புகள், கடற்பாம்புகள் அல்ல எனவும் அவை விலாங்கு மீனினத்தைச் சேர்ந்த ஆங்குஇலா ((Anguilla) என்ற மீனினமாகும் எனவும், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ​அதிகார சபையின் பொது ஆணையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார அறிவித்துள்ளார். 

ஆறுகள், ஏறிகள் மற்றும் களப்புகளில் வாழும் இந்த மீனினங்கள், தங்களது இனப்பெருக்கத்துக்காக, களப்புகளினூடாக கடலுக்குள் பிரவேசித்து, பாரிய தொகையாக ஒன்றுதிரண்டு முட்டையிடுவதாகவும் பின்னர், 2 மற்றும் 3 அங்குலம் நீளமான மீன் குஞ்சுகளாக அவை மீண்டும் களப்பினூடாக ஆறுகள் ஏறிகளைச் சென்றடைவதாகவும் அங்கேயே அவை தொடர்ந்து வளர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இனப்பெருக்கத்துக்காக கடலுக்குச் செல்லும் இவ்வகை மீனினங்கள், கடலிலிருந்து தொலைதூரம் செல்வதால், அவை குறித்து கண்டறிய முடிவதில்லை என்றும் தெரிவித்த பேராசிரியர், இம்மீனினங்கள் பிடிபட்டமையானது, சுனாமியோ அல்லது வேறு ஏதேனும் அனர்த்தத்துக்கோ வலிவகுக்கும் என்று கூறப்படும் செய்தியானது, வெறும் மூட நம்பிக்கையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X