Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 07 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர்ப்பற்று, வெள்ளைக்கல்மலைப் பகுதியில், காட்டு யானையொன்றின் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், இன்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில், வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் 51 வயதான முத்துலிங்கம் சுந்தரலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த நபர், மாடுகளைப் பராமரித்துக் கொண்டு அப்பகுதிலுள்ள வாடியில் இருந்தபோது, காட்டிலிருந்து வந்த யானைகளில் ஒன்று, அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.
இது தொடர்பில், அயல் வாடிகளில் இருந்தவர்கள் கண்டு, பொலிஸாருக்குத் தெரிவித்ததை அடுத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை, கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago