2025 மே 02, வெள்ளிக்கிழமை

காட்டுயானைகளால் தென்னைகள் துவம்சம்

Editorial   / 2020 மே 28 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள  நெடியமடு, களிக்குளம்  பகுதியில்  நேற்று (27) உட்புகுந்த காட்டுயானைகள்,  அங்குள்ள தென்னை மரங்களை அழித்துத் துவம்சம் செய்துள்ளன.

இப் பிரதேசத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், மாலை 6 மணிக்கெல்லாம் காட்டோரங்களில் யானைகள் நடமாடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை கவனத்தில் எடுத்து, காட்டுயானைகளை காடுகளுக்குள் விரட்டியடித்து, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும், மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X