Princiya Dixci / 2021 ஜூலை 04 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை காத்தான்குடி தபாலகம் மூடப்பட்டுள்ளது.
காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மற்றுமொரு ஊழியருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், காத்தான்குடி தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அதேவேளை, மேலும் ஒரு ஊழியருக்கும் கொரொனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, காத்தான்குடி தபாலகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
3 hours ago