Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (14) மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 27 பேர் சிக்கியதுடன் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
திங்கட்கிழமை (14) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி ஆரையம்பதி, நாவற்குடா, கல்லடி பிரதேசங்களில் இத்திடீர் சுற்றி வளைப்பினை மோட்டார் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமை, காப்புறுதி மற்றும் தஸ்தாவேஜூகள் இல்லாமை, தலைக்கவசம் அணியாதது போன்ற காரணங்களால் 27 பேர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரீ.எல் .ஜவ்பர்கான், எம் எஸ் எம் நூர்தீன்
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago