2025 மே 10, சனிக்கிழமை

குளிக்கச் சென்ற இளைஞன் முதலை தாக்கி மரணம்

Freelancer   / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

முதலை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பூபாலப்பிள்ளை துறைராசா எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விவசாய நடவடிக்கையை முடித்து விட்டு கானந்தனை பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நேரத்தை விட குறைக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X