2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 16 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

சுவாமி விவேகானந்தரின் 155ஆவது ஜனன தின நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை  மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள இராமகிருஷ்ணமிஷன் நிலையத்தில் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் காலை வேதமந்திரம் ஓதுதல், திருப்பள்ளியெழுச்சி, பஜனை, சொற்பொழிவு உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளதாக கல்லடி இராமகிருஷ்ணமிஷன் நிலையத்தின் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா மகராஜ் தெரிவித்தார்,

மேற்படி நிலையத்தின்; ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வின்போது, சுவாமி விவேகானந்தரின் ரத ஊர்வலமானது எதிர்வரும் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு -கல்முனைப் பிரதான வீதி வழியாக நடைபெறும்.

மேலும், ஆன்மிக நூல்கள் 15 சதவீத விலைக் கழிவில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X