2025 மே 12, திங்கட்கிழமை

சமூக ஆளுகையை வலுவூட்டும் அமுலாக்கத்துக்கு மட்டக்களப்பில் இரு பிரதேச சபைகள் தெரிவு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் சமூக ஆளுகையை வலுவூட்டுவதற்கான செயற்றிட்ட அமுலாக்கத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு கொக்கட்டிச்சோலை பிரதேச சபையும் வெல்லாவெளிப் பிரதேச சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஓக் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஜனதாக்ஸன் மற்றும் சர்வதேச கெயார் நிறுவனங்களினால் இத்திட்டம் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை குறிப்பாக, இலகுவில் பாதிக்கக்கூடிய தரப்பினரான பெண்கள், இளையோர் சமுதாயத்தை இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆளுகையில் அவர்களின் செயற்பாட்டுடன் பங்களிப்பைப் பெறவும் அபிவிருத்தியில் முன்னுரிமைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெறவும் தீர்வுகளை வரையறை செய்யவும் அவர்களின் தேவைகளையும் முன்னுரிமைகளையும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நிறைவேற்றக்கூடிய திட்டமிடலைப் பெறுவதற்கும் இத்திட்டம் துணை புரிவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலும் இலங்கையின் ஏனைய மகாணங்களிலும் அமுல்படுத்த உத்தேசித்துள்ள இத்திட்ட அமுலாக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக ஜனதாக்ஸன் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத் திட்ட இணைப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X