Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மய்யத்தின் 7ஆவது ஆண்டு நிறைவு விழா, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03) நடைபெற்றது.
மேற்படி மய்யத்தின் தலைவர் சாந்திமுகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்துகொண்டார்.
மேலும், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்..சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.றியாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, பிரதேச மட்ட இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அடையாள அட்டைகளும் பிரயாணப்பைகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago