Editorial / 2021 செப்டெம்பர் 10 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள, பிரதேசங்களில் வசிக்கும் கலைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு, காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில், காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட பல்துறைசார்ந்த கலைஞர்களுக்கு உதவித் தொகைக்கான காசோலை வழங்கும் இந் நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வி.விக்கினேஸ்வரனும் கலந்து கொண்டு உதவித் தொகைக்கான காசோலைகளை தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கி வைத்தனர்.
4 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Feb 2026