2025 மே 19, திங்கட்கிழமை

‘தேர்தல் சட்டங்களை விளங்கிக்கொள்ள பெண் வேட்பாளர்கள் வராதது வருத்தமளிக்கிறது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் விளக்கக் கூட்டம், ஏறாவூரில் திங்கட்கிழமை இடம்பெற்றபோது, அதில் பெண் வேட்பாளர்கள் எவரும் வருகை தராதது வருத்தமளிப்பதாகக் கூட்டத்தில் பங்குபற்றிய ஆண் வேட்பாளர்கள், ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் அதிருப்தி தெரிவித்தனர்.

பிரசாரம் செய்தல், கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவினர் தமது காரியாலயங்களை அமைத்தல், வாகனங்களைப் பாவித்தல், ஒலிபெருக்கிகளைப் பாவித்தல், கூட்டத்துக்கான இடங்களைப் பாவித்தல், கூட்டங்களை நடத்துதல் தொடர்பில் புதிய தேர்தல் ஒழுங்குமுறைகளின் கீழ் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு விதிகள் வேட்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எம். பியசேன ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் ஆகியோரால் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை அகிய உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் கூட்டம் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்காக தேர்தலில் போட்டியிடும் 9 அரசியல் கட்சிகள் இரண்டு சுயேச்சைக் குழுக்களினதும் சார்பில் சுமார் 55 ஆண் வேட்பாளர்கள் மாத்திரம் இந்தத் தேர்தல் சட்ட திட்டங்களைப் பற்றித் தெளிவு பெறும் கூட்டத்துக்கு சமுகமளித்திருந்தார்கள்.

எந்தவொரு கட்சியிலிருந்தோ சுயேச்சைக் குழுவிலிருந்தோ ஒரு பெண் வேட்பாளர் கூட தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பான கூட்டத்துக்கு வருகை தரவில்லை என்பது அவதானிக்கப்பட்டதுடன், தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பாக தெளிவுபடுத்திய பொலிஸ் அதிகாரிகளிடத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X