2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தல் முடியும் வரை இலவச அஞ்சல் வசதி

Freelancer   / 2023 ஜனவரி 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் உள்ளூராட்சி தேர்தலுக்கு இலவச அஞ்சல் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மா அதிபதி ராஜித கே. ரணசிங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்று நிரூபம், சகல மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபதிகளுக்கும், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்கள். அஞ்சல் அதிபர்கள் மற்றம் உப- அஞ்சல் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களையும், கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு  அனுப்புவதற்காக அஞ்சல் இடப்பட்ட பொதிகளையும், கடிதங்களையும்
முன்னுரிமையளித்து முதல் அஞ்சலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரையிலும் இந்த இலவச அஞ்சல் வசதி அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .