2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

புதிய அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

Kogilavani   / 2016 ஜூன் 07 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுதாவளை மகா வித்தியாலயத்தில் அதிபராகவிருந்து கடமைபுரிந்த எஸ்.அலேசியஸ் என்பவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து இவ்வியத்தியாலயத்திற்கு புதிய அதிபராக களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த பே.காப்தீபன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் திங்கட்கிழமை (06) கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய அதிபர் பே.காப்தீபனை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பழைய மாணவர்கள் உட்பட அனவரும் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவாரான இவர், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம்3 இல் சித்தியெய்தி, கொழும்பு றோயல் கலலூரியின் பிரதியதிபராகக் கடைமை புரிந்தார். பின்னர் மட்.பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடைப்புரிந்த இவரை தற்போது மட்.களுதாவளை மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X