Princiya Dixci / 2021 ஜூலை 08 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, எம் எஸ் எம் நூர்தீன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, இன்று (08) நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பல பகுதிகளிலும் இருந்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமாரின் ஏற்பாட்டில், கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, நிதி அமைச்சர் பசிலுக்கு, பதாகைகளை வைத்துள்ளனர்.
பொதுஜனப் பெரமுன கட்சியின கொடிகள் தொங்க விடப்பட்டு, பட்டாசி கொழுத்தி, ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்தனர்.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026