Princiya Dixci / 2021 ஜூலை 27 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாகவே பாசிக்குடா கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக பாசிக்குடா சுற்றுலா பொலிஸ் காவலரன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கடற்கரைப் பகுதிக்குள் எவரும் செல்லாத வகையில் தடைபோட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பாசிக்குடா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago