Princiya Dixci / 2021 ஜூலை 06 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (06) பிணை வழங்கியுள்ளது.
கொவிட் 19 அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற்கொண்டு, இன்றையதினம் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரசாந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையில், நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2020.06.08 அன்று, காத்தான்குடி பொலிஸாரால் பிரசாந்தன் கைது செய்யப்பட்டு, சட்டாமாதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
23 minute ago
37 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
4 hours ago
4 hours ago