Freelancer / 2025 ஜூலை 24 , பி.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகமலே பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று இன்று (24) அப்பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு வெற்று குண்டுகளுடன் சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைதான சந்தேக நபர், பொத்துவில் 05 பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago