2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மதுபானங்களுடன் பெண் உட்பட இருவர் கைது

Editorial   / 2023 மே 04 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

வெசாக் வாரத்தையொட்டி காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் மற்றும் கசிப்பு போத்தல்களை கைபற்றப்பட்டதுடன் பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.

காலை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சியாம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த சுற்றிவளைப்பை இன்று(4) மேற்கொண்டர்.

அதன்போது மதுபான போத்தல்கள் மற்றும் கசிப்பு போத்தல்களை கைப்பற்றியதுடன் 39 வயதுடைய பெண் ஒருவரையும் 49 வயதுடைய ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

 

நாவற்குடா நூன்காம் குறுக்குத் தெருவில் வீடொன்றின் வெசாக் விடுமுறை காலத்தில் அதிக பணத்திற்கு விற்பனை செய்வதற்காக குப்பைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த 19 சிறிய சாராய போத்தல்கள் மற்றும் 18 பியர் டின்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

அதே பகுதியில் மற்றோர் இடத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைத்திருந்த 750 மில்லி லீற்றர் கசிப்பு போத்தலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பில் உப பொலிஸ் பரிசோதகர் எம்.இஸ்ஹாக் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயவீர தாஹா சந்திரகாசன் தனோஜன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .