2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மருத்துவபீட தாதியர்களுக்கு விழிப்பூட்டல்

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ. எல்.ஜவ்பர்கான்

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட தாதிய மாணவர்களுக்கு, உணவு சுகாதாரம் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில், கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு பொதுச் சந்தையில் வைத்து இந்த விழிப்பூட்டல் செயற்பாடு, இன்று (15) முன்னெடுக்கப்பட்டது.

தரமான உணவுப் பொருள்களை விற்பனை நிலையங்களில் கண்டறிதல், மனித பாவனைக்குதவாத பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தக்கர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு உணவுப் பாதுகாப்பு தொடர்பாக விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X