2025 மே 07, புதன்கிழமை

மாகாண ஆளுநர் ஏறாவூர் விஜயம்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், ஏறாவூர் பிரதேசத்துக்கு இம்மாதம் 28ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவருமான எம்.எஸ்.சுபைரின் அழைப்பை ஏற்றே, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர் விடுதிக் கட்டடம், ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியாசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடம் என்பன, அன்றைய தினம் ஆளுநரால் திறந்து வைக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்விலும் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X