2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் ஐவர் படுகாயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி, கடற்கரை வீதியில், செவ்வாய்க்கிழமை இரவு 9.30க்கு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாகக்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்தவர்களில், 19 வயதுடை இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, காத்தான்குடி வைத்தியசாலைத் தகவல் தெரிவிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X