2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 03 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன் எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதியே விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களே  காயமடைந்துள்ளதுடன், இவர்கள்; காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X