2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 மார்ச் 09 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

லிந்துலை, வோல்ட்றீம் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் சிறப்பு தேர்ச்சியுடையோர் தொழில்ப்பாட்டு நிலையத்துக்கு, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள், திங்கட்கிழமை(7) வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிலையத்தின், முதலாம் ஆண்டு நிறைவு விழா  திங்கட்கிழமை(7) நடைபெற்றது. இதன்போதே மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வோல்ட்றீம் தோட்ட முகாமையாளர் டி.யூ.வனிகசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூகசேவைகள் அமைச்சின் பணிப்பாளர் பிரதீப் லசந்த, வேல்ட் விஷன் நிறுவனத்தின் லிந்துலை பிரதேச வேலைத்திட்ட முகாமையாளர் நிர்மல்ராஜ் பெர்னாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .