2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியா கிரகத்தில்

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் பல்கலைகழக வளாகத்தக்குள் நடத்தி வந்த சத்தியா கிரக போராட்டத்தை கண்டி பேராதனை வீதியில் உள்ள கலஹா சந்திக்கு மாற்றுவதற்கு இன்று தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் பேராதனை பல்கலை கழகத்துக்கு வந்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்காவுக்கு இடையூறு விளைவித்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்குமாறும் கோரியே மாணவர்கள் இச்சத்திய கிரகத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களை விடுவிக்கும் வரை சத்தியாக் கிரக போராட்டத்ததை கைவிடப்போவதில்லை என பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் கூறுகின்றது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X