2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் வடிவேல் சுரேஷ் நேரில் சென்று பார்வை

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை-மடுல்சீமை விபத்தில் காயமடைந்தவர்களை ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான  வைத்திய  தேவைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வைத்தியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசறை-மடுல்சீமை வீதி, இரண்டாம் மைல்;கல்லுக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.  

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இவ்விபத்தில்,  காயமடைந்தவர்களில் 23 பேர் பெண்கள் என்று தெரிவித்துள்ள பசறை பொலிஸார் காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .